ஐ.நாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை

ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக நேற்று முன்தினம் கல்கிசை பகுதியில் நடத்தப்பட்ட செயற்பாடுகளை ஐ.நாவின் அகதிகள் தொடர்பாக உயிரிஸ்தானிகர் அலுவலகம் கண்டித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கத்திற்கும் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

ஏதேனும் நாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்கு வந்திருந்தால் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை அவர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கமே முழு பாதுகாப்பையும் வழங்க வேண்டுமெனவும் இதன்படி அண்மையில் ரோஹிங்யா அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா உண்ணிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்