இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரன் தரப்புக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது.
அதில், இந்த விவகாரத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிவை அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கூடுதல் கால அவகாசம் அளிக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து திட்டமிட்டபடி, அக்டோர் 6ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரிக்கும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.