கடத்தப்பட்ட யுவதி மீட்பு

கம்பஹாப் பிரதேசத்தில் நேற்றுக்காலை பணிக்குச் சென்ற யுவதியொருவரை முச்சக்கர வண்டியில் வந்த கும்பல் ஒன்று கடத்திச் செல்ல முற்பட்ட போது யுவதியைக் காப்பாற்றச் சென்ற 60 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 வயதான கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதியைக் கடத்திச் சென்றவர் யுவதியின் முன்னாள் காதலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதியைப் பலவந்தமாக முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதை அறிந்த அயலவர்கள், மோட்டார் வாகனங்களில் அவர்களை பின்தொடர்ந்துள்ளனர் அயலவர்களுடன் சென்ற 60 வயதுடைய நபரே சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் இதய நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்தவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அயலவர்களின் தாக்குதலுக்கு உள்ளான யுவதியின் முன்னாள் காதலவர் கம்பஹா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உதவ வந்த ஏனைய இரண்டு இளைஞர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்