சிவாஜிலிங்கம் தொடர்பில் ஜீ.எல்.பீரிஸ் சாடல்!

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்படுவதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை இராணுவத்திற்கு கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொடர்ந்து போராடி வருகின்றார்.

உண்மையில் சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்படுகின்றார். இதனாலேயே இராணுவத்துக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என போராடுவதாக ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

எங்கள் இராணுவத்துக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த நாட்டு இராணுவத்துக்கும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேரத்துக்கு நேரம் தேர்தலை பிற்போடுவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்