வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், படையினர் தொடர்பாக எந்தவித கருத்தை வெளியிட்டாலும் கவனத்தில் கொள்ளப் போவதில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பியகம பிரதேசத்தில் நேற்று அபிவிருத்தி செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு மற்றும் தீர்மானங்களை சிறீலங்கா ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே முன்னெடுத்து வருவதாகவும், விக்னேஸ்வரன் கூறும் போன்று வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு முதல்வரின் ஒரு சில கருத்துக்கள் அடிப்படைவாத சிந்தனை உடையவை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், முதலமைச்சர் கோரும் விதத்தில் வடக்கில் இருந்து இராணுவத்தையோ அவர்களது முகாம்களையோ அகற்ற முடியாது என தெரிவித்தார்.