பரோலில் வெளியில் வருகிறார் சசிகலா?

பல்லுறுப்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனை சந்திக்க 10 நாள்கள் பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்ததை அடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்துவிட்டது. உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். உறுப்பு தான மையத்தில் கல்லீரலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டயாலிசிஸ் சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.

அவரை சந்திக்க சசிகலா பரோல் கேட்கக் கூடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் நடராஜனின் நிலை மோசமாக உள்ளது. கவலைக்கிடமாக இருக்கும் கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோல் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது விடுமுறை காலம் என்பதால் விடுமுறை முடிந்து வரும் 5- ம் தேதியில் இருந்து 10 நாட்கள் பரோலில் விடுவிக்குமாறு கோரிக்கை மனுவை அவர் அளிக்கவுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்