வடக்கில் இடம்பெற்ற கொடுமைகளுக்கு நீதி வேண்டும்

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதி சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் எதிர்காலத்தை நிலைபேறானதாக மாற்ற வலியுறுத்தியும், போர், துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளில் கொல்லப்பட்ட சிறுவர்களுக்கான நீதியை வலியுறுத்தியும் இதன்போது கையெழுத்துக்களும் சேகரிக்கப்பட்டன.

அத்தோடு, சிறுவர்கள் மத்தியில் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டுவரும் போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்