இந்தியாவில் கோர விபத்தில் ஈழ அகதி ஒருவர் பரிதாபமாக பலி!

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து விழுப்புரம் மாவட்டம் – கோட்டக்குப்பம் அருகே திங்கட்கிழமை இரவு வேளையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கீழ்ப்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 54 வயதுடைய கந்தையா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் ஒரு கூலித் தொழிலாளி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் கிழக்கு கடற்கரைச்சாலையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்டு வீதியில் விழுந்துள்ளார்.

இந்த நிலையில் வீதியில் சென்ற மற்றொரு காரின் சில்லில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கந்தையாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கோட்டக்குப்பம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்