இடைகால அறிக்கை தொடர்பில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் பூரண விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசிங்கம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று கிளையின் பொதுச் சபைக்கூட்டம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.

கிளையின் தலைவர் மார்க்கண்டு நடராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் பொதுச்சபை அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்; கருத்து தெரிவிக்கும் போதே பொதுச்செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னைய அரசியல் நிலமைகளைப் பாடமாகக் கொண்டு தற்போது வெளிவந்துள்ள இடைகால அறிக்கை குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய தேவை உள்ளதாக கூறினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்