மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களில் இது வரை கைது செய்யப்படாதிருக்கும் முக்கிய நபர் எதிர்வரும் சில வாரங்களில் கைது செய்யப்படவுள்ளதாக உயர் மட்ட பாதுகாப்பு தரப்பினரை ஆதாரம் காட்டி சிங்கள வார பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதுது.
அவருக்கு எதிராக அதிகாரங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை , அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.