‘‘வடக்கு மாகாணத்துக்கு முன்னாள் நீதியரசர் முதலமைச்சராக நியமிக்க ப்பட்டார். அவர் தமது பிரச்சினை களுக்கு நீதிவழங்குவார் என தமிழ்மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்குக் கிடைத்ததோ வெறுமனே ஏமாற்றமே’’ – இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் குற்றஞ்சாட்டினார்.
வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு நேற்றையதினம் அவைத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
அமர்வில் அவைத்தலைவரால் அரசியல்கைதிகள் பிரச்சினை தொடர்பான பிரேரணை கொண்டு வரப்பட்டது.
இதுதொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும் போதே தவநாதன் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணசபை மிகப்பெரிய அளவிலே எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் நீதியரசர் ஒருவர் முதலமைச்சரானதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்தது.
வடக்கு முதல்வர் சட்டநுணுக்கங்கள் தெரிந்தவர். பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அரசியல்கைதிகள் விடயத்திலோ அல்லது தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினை யிலோ முதலமைச்சர் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
அரசியல்கைதிகள் பலதடவைகள் போராட்டங்களை மேற்கொண்டனர். ஏராளமான உறுதிமொழிகளைக் கேட்டு மிகவும் சலிப்படைந்துள்ளனர்.
இப்போது உயிரைத் துறக்கும் வகையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏனைய போராட்டங்களைப் போல இதில் அக்கறையில்லாமல் இருக்கக்கூடாது.
அவர்களின் உயிர்களைக் காப்பாற்றி காத்திரமான தீர்வை வழங்க மாகாணசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் – – என்றார்.