சுவிஸில் தமிழ் இளைஞன் காவல்துறையால் சுட்டுக்கொலை!

சுவிற்சர்லாந்தில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றனர். முறைப்பாடு ஒன்றையடுத்து, பொலிஸார் இன்று அதிகாலையில் இரண்டு அகதிகளை அழைத்துக்கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது அவர் தாக்குதல் நடத்த முயன்றார். உடனடியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவாக செயல்பட்டு தாக்குதல்தாரியை துப்பாக்கியால் சுட்டார். இரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கரன் எனப்படும் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முழுமையான விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்