வடக்கில் பெண் மந்திரவாதிகள் – மக்களே எச்சரிக்கை

காதலனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொள்ளையில் ஈடுபட்ட யுவதி ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலகொல்ல பிரதேச வீடொன்றில் 670000 ரூபாய் பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய பண மோசடி செய்த தமிழ் மந்திரவாதி பெண் ஒருவரும் முஸ்லிம் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நினைப்பதெல்லாம் கிடைக்கும் மந்திரம் உண்டு என பெண் மந்திரவாதி ஒருவரின் விளம்பரம் தமிழ் பத்திரிகையொன்றில் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்த விளம்பரத்தை பார்த்த பலகொல்ல பிரதேசத்தை சேர்ந்த வீட்டு பணிப்பெண் தனது காதலனை பெற்றுத் தருமாறு விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

மந்திரம் செய்யும் தமிழ் பெண் தனது கணக்கிற்கு 5000 ரூபாய் பணம் வைப்பிடுமாறு பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். பணம் வைப்பிட்ட பின்னர் காதலனை பெற்றுக் கொள்வதற்காக காளி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் என கூறி அதற்கு பணம் கோரியுள்ளார்.

இவ்வாறு மந்திரம் செய்வதற்கு பணம் பெற்றுக் கொள்வதற்காக பணிப்பெண் தங்க நகைகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மந்திரம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பெண் அக்குரனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவருக்கு உதவிய முஸ்லிம் இளைஞர் கட்டுகஸ்தொட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் தமிழ் மக்களின் பணத்தை இந்த மோசடி செய்துள்ளதாகவும், அவரது கணக்கில் தற்போது 4 லட்சம் ரூபாய் பணம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் மந்திரவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5000 ரூபா ரொக்கப் பிணையிலும், 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்