கிழக்கிலும் வாள்வெட்டுக் குழுக்கள் – ஒருவர் படுகாயம்

ஈழத்தின் வடக்கு பகுதியில் பலரை தாக்கிய வாள்வெட்டுக் குழு, கிழக்கிலும் அண்மைய காலமாக இவ்வாறான சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக, திருகோணமலை புளியங்குளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியின் மீது இன்று (வெள்ளிக்கிழமை) காலை வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, முச்சக்கரவண்டியும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்