மான் இறைச்சியுடன் நபரொருவர் கைது!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத் நகர் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் மான் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் 50 வயதான நபருடன், அவரிடமிருந்து 10 கிலோவும் 750 கிராம் மான் இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா கிரான் காட்டுப்பகுதியில் சுமார் 7 வருடங்களுக்கு அதிக காலமாக இவ்வேட்டையில் ஈடுபடும் நபர், வேட்டையாடிய மானை இறைச்சியாக்கும் நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரையும், இறைச்சி மற்றும் கத்தி உள்ளிட்ட பொருட்களையும், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், திருகோணமலை தலைமை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்