தொடரும் மழையினால் மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை , காலி ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு 9.30 வரையிலான 24 மணித்தியால காலப்பகுதியில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் பிட்டபெத்தற பிரதேச செயலாளர் பிரிவிலும், காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவிலும், களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர பகுதிகளிலும், மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும் கூறினார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்