மக்களிடம் சேர்த்த நிதியினை சிலர் பதுக்கிவைத்துள்ளனர் – GTF தலைவர் இமானுவேல்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியினை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பதுக்கி வைத்துள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ எனத் தனக்குத் தெரியாது எனவும், அவர் உயிருடன் இருக்கிறார் என் எண்ணிக்கொண்டு அந்த நிதியினை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து உதவவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்