கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்தார் மைத்திரி!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் நியாயமான தீர்வினை தரக்கோரி கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிறிலங்கா ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்திப்பிற்காக கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்கு வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், சந்திப்பதற்கான திகதியை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதனை ஏற்றுக் கொண்ட போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்