முல்லைத்தீவில் 8வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற 48 வயது நபர் கைது!

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இன்று (14)எட்டு வயதினை உடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயன்ற 48 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்கு பகுதியில் வசித்துவரும் 8அகவை சிறுமி ஒருவர் கடைஒன்றிற்கு மண்எண்ணைய் வாங்க சென்றுள்ளார்.

இன்னிலையில் கடையின் உரிமையாளர் மண் எண்ணைய் வீட்டில்தான் இருக்கின்றது என வீட்டிற்கு சிறுமியினை அழைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயன்றுள்ளார்.இந்த நிலையில் சிறுமி தனக்கு நடந்தவற்றை அவரது தாயாருக்கு தெரிவித்துள்ளார். தாயார் உடனடியாக முல்லைத்தீவு பொலீஸ் நிலையம் சென்று தனது முறைப்பாட்டினை தெரிவித்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீஸார் உடனடியாக குறித்த நபரை கைதுசெய்துள்ளார்கள்.

சிறுமி பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளார்.சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்க்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்