குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான செல்வன் புவனேஸ்வரி (வயது 30) எனும் குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணின் கணவர் தற்போது வேலை நிமித்தம் வெளிநாட்டில் உள்ளார்.

பெண்ணின் சடலம் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் காணப்பட்ட அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்துச் சம்பவ இடத்துக்கு வந்த ஏறாவூர் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டனர்

About காண்டீபன்

மறுமொழி இடவும்