இனி அதிமுகவுக்கு மூடுவிழா தான் – சீமான்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார். இதனால் இன்னும் சில நாள்களில் அதற்கான அறிவிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே.நகர் தேர்தல் என்பது இடைத்தேர்தலாக இருந்தாலும் மக்களின் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை பார்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகவே கருதப்படுகிறது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டால் கலைக்கோட்டுதயமே மீண்டும் போட்டியிடுவார்.

அரசு நியமிக்கும் மருத்துவக் குழு அரசுக்கு எதிராக எப்படி அறிக்கை அளிக்கும். அதிமுக 46-ஆவது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடி வருகிறது. அதற்கு பதில் மூடு விழா கொண்டாடினால் நல்லது என்றார் அவர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்