சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
இவர் இன்று முற்பகல் 8.30 இற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ தனது புதல்வரின் நலன் குறித்து அறிந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் இன்றயை தினம் நாடுதிரும்பியுள்ளார்.