மரமுந்திரிகை உற்பத்தியை அதிகரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை!

மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு மானிய முறையில் உர வகைகள் வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி திட்டத்தின் கீழ் கல்கமுவ, யாப்பஹூவ, மாகோ, நிக்கவரட்டிய, எஹட்டுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் கன்றுகள் முதலான விவசாய உள்ளீடுகள் விவசாய அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 450 விவசாயிகள் பயன்பெறவுள்ளதுடன், குருநாகல் மாவட்டத்தில் 600 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் புதிதாக மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்