வவுனியாவில் குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

வவுனியாவில் இன்று பிற்பகல் வேளையில் குளத்திற்கு குளிக்கச்சென்றவர் மாலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈச்சங்குளம், மறவன்குளம் பகுதியிலுள்ள நடராசா சந்தனகுமார் என்ற 36 வயது இளைஞன் இன்று பிற்பகல் வேளையில் கல்மடு குளத்திற்கு குளிக்கச் செல்வதாக தெரிவித்து விட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து மாலை அக்குளத்திற்கு குளிக்கச் சென்ற வேறொருவர் குறித்த நபர் குளத்தில் சடலமாக இருப்பதை அவதானித்ததுடன் இது குறித்து ஈச்சங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் குறித்த நபருக்கு வலிப்பு வருவதாக அவரது உறவினர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் வவுனியா பொதுவைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்