உண்ணாவிரத கைதிகளை அனுதரபுரத்தில் பார்வையிட்ட பொது அமைப்புக்களும் அசியல் தரப்புக்களும்

அனுரதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் அரசியல் கைதிகளை பொது அமைப்புக்களை மற்றும் அரசியல் அமைப்புக்களை சார்ந்தவர்கள் இன்று சந்தித்துள்ளனர்.


அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பினர் நான்குபேர் இன்றய தினம் அனுரதபுரம் சிறைச்சாலைக்கு வியஜம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கைதிகளை சந்தித்துள்ளனர்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்கள் கைதிகள் 31வது நாளாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவருவதனால் அவர்களது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் இந்நிலை நீடித்தால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் ஊடகங்களுக்க கருத்துத் தெரிவித்திருந்தனர்.
மேலும் தமது வழக்குகள் வவுனியாவுக்கு மாற்றப்பட்டால் மட்டுமே உண்ணாவிரதத்தை தம்மால் கைவிட முடியும் எனவும் வழக்கு போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று சாதகமான பதில் வராது விட்டால் தாம் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்றும் கைதிகள் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்தீலீசன் ஆசிரியர், கிராமி உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் இன்பநாயகம், தமிழ் மக்கள் வாழ்வுரிமை இயக்க இணைப்பாளர் எஸ்.சோதிலிங்கம் ஆகியோர் அனுரதபுரம் சென்று கைதிகளை சந்தித்திருந்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்