வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் வெடிபெருட்கள் மீட்பு!

கிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் நேற்று இரவு வெடிபொருட்கள் அதிரடிப்படையால் மீட்க்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டகச்சி புழுதியாறு குளத்தில் விடுதலைப்புலிகள் யுத்தகாலத்தில் அனுராதபுரம் விமானநிலைய தாக்குதலுக்கு ஒத்திகை இடம்பொற்ற விமான ஓடுபாதைகள் உள்ள இடத்தில் இவ் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இதன்போது 60 மி.மீ 10 மோட்டார் செல்கள், 81 மி.மீ 01 மோட்டார் செல் நேற்று இரவு விசேட அதிரடி படையால் மீட்கப்பட்டுள்ளது. இரணைமடு விமான படையினர் இராமநாதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையால் இவ் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்