இலங்கையில் இன்றுமுதல் இலத்திரனியல் அடையாள அட்டை!

இலங்கையில் இன்று முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இச் சேவையின் முதற்கட்டமாக, தற்காலிக தேசிய அடையாள அட்டைகள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையாக இச் சேவை வழங்கப்படவுள்ளது.

பரீட்சார்த்த நடவடிக்கையின் பின்னர், இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படும். ஏற்கனவே தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை பெறவேண்டிய தேவை கிடையாது.

எனினும், இலத்திரனியல் அடையாள அட்டை நடைமுறைக்கு வந்த பின்னர், அரசாங்கத்தால் வழங்கப்படும் கால அவகாசத்திற்குள் அனைவரும் தமது அடையாள அட்டைகளை மாற்றிக்கொள்வது அவசியமென ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்