ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை!யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் அரியாலை ஏ.வி ஒழுங்கை சேர்ந்த குறித்த குடும்பத்தினரே இவ்வாறு தற்கொலை செய்து இறந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதில் கிருசாந்தன் சுநேத்திரா எனும் 28 வயதுடைய தாய் மற்றும் அவருன் பிள்ளைகளான நான்கு வயதுடைய, கர்சா மற்றும் இரண்டு வயதுகளையுடைய இரட்டையர்களான சஜித் , சரவணா என்பவர்களே உயிரிழந்துள்ளார்கள்.

குளிர்பானம் ஒன்றில் விசம் கலந்து பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு தாயும் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்கென யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவரான கிருசாந்தன் என்பவர் கடந்த இரு மாதங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடன் கொடுத்து ஏமாந்த காரணத்தினால் தற்கொலை செய்து உயிரிழந்திருந்த நிலையில் அதன் பாதிப்பு காரணமாக இவர்கள் இன்று குடும்பமாக தற்கொலை செய்திருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்