வடமாகாணத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளராக மாவை – சிறிதரன்

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சருக்கான அனைத்துத் தகுதிகளும் அண்ணன் மாவை சேனாதிராஜாவுக்கே உண்டு எனவும் அவரே அடுத்த வடமாகாண முதலமைச்சர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று காங்கேசன்துறையில் தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகம் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த கிழமை என்னிடம் பலர் அடுத்த வடமாகாண முதலமைச்சர் பிரதம நீதியரசர் ஸ்ரீபவனா என வினவினர்.

நான் அதற்கு, நீதியரசர் ஸ்ரீபவனை நியமிப்பது தொடர்பாக கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இருப்பினும், வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக வருவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் அண்ணன் மாவை சேனாதிராஜாவுக்கு அனைத்துத் தகுதிகளும் உண்டு.

ஆகவே,அடுத்த முதலமைச்சராக எமது கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்