வவுனியா பகவான் சிறி சத்திய சாயி சேவா நிலையத்தினால் கள்ளப்பாடு வடக்கில் உதவி வழங்கல்

முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்கு பகுதியில் வவுனியா சத்திய சாயி சேவா நிலையத்தினரால் முதியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு ஒன்று கடந்த 2017.10.29அன்று இடம்பெற்றது இந்நிகழ்வில் விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்து கொண்டார்.

கள்ளப்பாடு வடக்கு ஆதி வைரவர் ஆலயத்தின் மண்டகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வானது விருந்தினர்களது மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமானது. மேலும் வவுனியா பகவான் சிறி சத்;திய சாயி சேவா நிலையத்தினரால் இறையன்பு பாசுரங்களும் பாடப்பட்டன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களது உரையும் மாணவர்கள் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் நடராசா தசரதகுமாரன், ஆதி வைரவர் ஆலயத்தின் பொருளாளர், செயலாளர், அறநெறி ஆசிரியர் செல்வி கோகுலன் நுதாயினி மற்றும் வவுனியா பகவான் சிறி சத்திய சாயி சேவா நிலைய தலைவர், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் கள்ளப்பாடு வடக்கு அறநெறி பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் முதியவர்களுக்கான உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்