நாம் வெளியேறமாட்டோம், தொடர்ந்து போராடுவோம் – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி

யாழ்.பல்கலைக்கழக விடுதிகளை விட்டு வெளியேறப்போவதில்லை என மாணவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளான தமது உறவுகளுக்காகப் போராடுவதற்கு உரிமை உள்ளது எனவும் அதை யாரும் தடுக்க முடியாது எனவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறும் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் மூன்று கைதிகளின் வழக்குகளையும் மீண்டும் வவுனியாவுக்கு மாற்றுமாறும் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களை முடக்கும் நோக்கத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் செயற்பட்டுள்ளது என மாணவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

எமது பல்கலைக்கழகத்திற்குள் நாம் நுழைய நிர்வாகம் எப்படித் தடை விதிக்க முடியும் எனவும் மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் தமது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். எமது கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை நாம் போராட்டத்தைக் கைவிடமாட்டோம்.

அதேவேளை, பல்கலைக்கழகத்தை விட்டோ விடுதிகளை விட்டோ நாம் வெளியேறமாட்டோம் எனவும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்