அரியாலை இளைஞரைச் சுட்ட துப்பாக்கி எஸ்.ரி.எவ் முகாமில் சிக்கியது!

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள சிறப்பு அதிரடிப்படை (எஸ்.ரி.எவ்) முகாமில் இருந்து அரியாலை இளைஞரைச் சுட்டுக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22ஆம் திகதி அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் டொன் பொஸ்கோ ரிச்மன் என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடி முகாமுக்குள் நுழைந்து தேடுதல் நடத்திய குற்றப் புலானாய்வுப் பிரிவினர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி, மோட்டார் சைக்கிள், ஓட்டோ ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்