கடும் மழைக்கு மத்­தி­யி­லும் கேப்­பா­பி­லவு மக்­கள் போராட்டம்

தொடர் மழை­யிலும் சிர­மத்­தின் மத்­தி­யில் போராட்­டத்­தைத் தொடர்­வ­தாக போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

கடுங்­கு­ளிர், நுளம்­புக் கடிக்கு மத்­தி­யி­லும் சீரான உண­வும் இன்­றியே போராட்­டத்தை முன்­னெ டுத்­து­ வ­ரு­கி­றோம் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

வடக்­கில் தொட­ரும் மழை முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் பல இடங்­க­ளி­லும் தீவி­ர­மா­கவே உள்­ளது. தற்­போ­தும் அதி­க­ள­வில் மழை பெய்­து­கொண்­டி­ருக்­கி­றது.

மாவட்­டத்­தின் கேப்­பா­பி­ல­வில் தமது 482 ஏக்கர் காணி­க­ளை­யும் விடு­விக்­கு­மா­று­கோரி காணி உரி­மை­யா­ளர்­க­ள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். அவ்­வாறு 138 குடும்­பங்­க­ளின் காணி­கள் இரா­ணு­வத்­தி­ன­ரால் முடக்­கப்­பட்­டுள்ளன. அவர்­க­ளது போராட்­டம் 249 நாள்­களை எட்­டி­யுள்­ளது.

ஆனால் தீர்வு இன்­னும் கிடைக்­க­வில்லை. கடும் மழைக்கு மத்­தி­யில் அவர்­க­ளது போராட்­டம் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

இந்த நிலை­யில் அங்கு போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் குழு­வின் தலை­வ­ரான ஆ.வேலா­யு­தம் தெரி­வித்­த­தா­வது:
“இன்று 4ஆவது நா­ளாக மழை பெய்­து­கொண்­டி­ருக்­கி­றது. சாதா­ரண சிறிய பந்­த­லுக்­குள் நாம் முடங்­கி­யி­ருந்து போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ளோம்.

குளி­ரால் பீடிக்­கப்­பட்­டுள்­ளோம். நுளம்­புத் தொல்­லை­யும் ஒரு­பு­றம் விடு­வ­தாக இல்லை. தற்­போது உண­வும் ஏற்­ற­தாக இல்லை. கஞ்­சி­யும் கூழும் குடித்தே வாழ்­வா­தா­ரம் போராட்­டத்­து­டன் கடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.

மழை விடு­வ­தாக இல்லை. நிலம் குளிர்ந்­து­விட்­டது. பந்­த­லைச் சுற்றி மழை­வெள்­ளம் வடிந்­தோ­டிக் கொண்­டி­ருக்­கி­றது. தூவா­னம் பந்­த­லுக்கு உள்ளே இருப்­ப­வர்­க­ளை­யும் நனைக்­கி­றது. என்ன இருந்­தா­லும் முன்­ன­ரை­விட இப்­போது நடத்­து­வ­து­தான் போராட்­டம் என்று கூறு­ம­ள­வுக்கு நில­மையை நாங்­கள் உணர்ந்­து­கொண்­டுள்­ளோம்.

ஆனால் எமது கோரிக்­கையை ஏற்று எமது காணி­கள் விடு­விக்­கும் வரை நாங்­கள் போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை. எடுத்த முடி­வி­லி­ருந்து நாங்­கள் பின்­வாங்­கப் போவ­தில்லை. போராட்­டம் தொட­ரும்” என்­றார்.

அங்கு பெய்­து­வ­ரும் மழை­யால் பல­தாழ் நிலங்­க­ளில் வெள்­ளம் புகுந்­துள்­ளது. வீதி­கள் பல வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ளன. இத­னால் மக்­க­ளின் இயல்பு வாழ்வு பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் போக்­கு­வ­ரத்து முடங்­கும் அள­வுக்கு இன்­னும் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்