வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு யாழ்ப்பாண நீதிவான் மன்று ஒரு மாத கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் விற்பனை முகாமையாளராக கடமையாற்றும் இளைஞன் ஒருவனுக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு எடுக்கப்பட்டபோது தடைசெய்யப்பட்ட ஆயுதமான வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டை இளைஞன் ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நீதிவான் சி. சதீஸ்தரன் இளைஞனுக்கு ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார்.