யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தின் பல இடங்களில் ஆறாவது நாளாகவும் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வளிமண்டல தாழமுக்கம் நிலைகொண்டிருப்பதனாலேயே கடுமையான மழை பெய்வதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை, மழையுடன் கூடிய காலநிலை இன்னும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அம்பாந்தோட்டை முதல் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.