யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் சர்வதேச நாடுகளின் விரும்பங்களை நிறைவேற்ற அவ்வாறான பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
தென்பகுதியில் நேற்று இடம்பெற்ற மஹிந்த ராஜபக்ஸவின் தயாரின் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது புதிய அரசியல் யாப்பு ஒன்றின் தேவை இல்லை எனவும், ஆனால் அதனை பொருட்படுத்தாது அரசாங்கம் கண்மூடிதனமாக செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதிலும் குறிப்பாக மாநாயக்க தேர்களை உதாசினப்படுத்தி இந்தநடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.