முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!

தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அண்மைய நாட்களாக சுத்தப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், மாவீரர்களின் உறவினர்கள், பிரதேச இளைஞர்கள் என பலரும் இணைந்து இன்று குறித்த சிரமதான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த மாவீரர் துயிலும் இல்லம் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், காணியின் முன் பகுதியில் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்