2018ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில், எதிர்வரும் 16ஆம் திகதியன்று, ஜனாதிபதியைச் சந்தித்தன் பின்னர் தீர்மானிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நல்லாட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் இரண்டு வரவு- செலவுத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்காமை காரணமாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை எனவும், இது குறித்து உறுப்பினர்கள் அனைவரும் கலந்துரையாட வேண்டியது அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்தே, ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

