யாழில் வெள்ள நீரில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்.காக்கைதீவில் மாட்டுக்கு புல் வெட்டச் சென்ற 56 வயதான குடும்பஸ்தர் ஒருவர் வெள்ள நீரில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ரூபசிங்கம் என்ற நபரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடிய போதே அவர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது.உடனடியாக அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், ஏற்கனவே அவர் இறந்தமையை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.இறுதியில் குறித்த நபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்