உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிட கஜேந்திரகுமார், சுரேஷ் முடிவு!

எதிர்வரும் உள்ராட்சித் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர முன்னணியும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கூட்டுச் சேர்ந்து பொது அணியாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

இது தொடர்பில் இரு தலைவர்களும் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதுடன் பொதுச் சின்னம் ஒன்றையும் கோரியுள்ளனர்.

பொது அணிக்கான பொதுச் சின்னம் வழங்குவதை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது

About சாதுரியன்

மறுமொழி இடவும்