வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கமா? சுகாஸ் சந்தேகம்!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களானது தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதை தடுப்பதற்கான அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட செயலா என சட்டத்தரணி க.சுகாஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களை விட தற்போது யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் பொலிஸார் உள்ளார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்