சம்பந்தனை வெளியேற்றுவதா?ஆராய்கிறது ஜதேக!

தற்போது இரா.சம்பந்தன் பாவனையிலுள்ள எதிர்கட்சி தலைவர் வதிவிடத்தை கேருவதா அல்லது அவரையே அங்கு தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிப்பதாவென ஜக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்துவருகின்றது. கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பயன்பாட்டுக்கு பெற்றுகொடுக்கப்படுமென அறிய முடிகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னாள் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது குறித்த அலுவலகத்தை பயன்படுத்தியிருந்த போதும், இதுவரையில் உத்தியோகபூர்மாக கையளிக்கவில்லை எனவும் தெரிவியவருகிறது. எவ்வாறாயினும் குறித்த அலுவலகத்தை எதிர்வரும் (04) புதனன்று ஐ.தே.கவுக்கு பெற்றுகொடுப்படவுள்ளதாக அறிய முடிகிறது. […]

எம்மோடு வாருங்கள் அருந்தவம் விடுக்கும் கோரிக்கை

அண்மையில் தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை பற்றி கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதிலும் அதுவும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அது மிக அவசியமானது என்பதிலும் மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால் அந்த ஒற்றுமையை கோருவோரிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம். இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் இன்று (29) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும், எம்மிடையே […]

விடுதலைக்காக அரசுடன் பேசி தீர்வு பெற தயார்

அழிந்துபோன எமது தேசத்தையும் சிதைந்துபோன எமது குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்புகின்ற தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நாகரீகமுடைய மக்களாக வாழ்வதற்காக எங்களை நாங்கள் ஆளவேண்டும். இதற்கான இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்த இனமாக நாங்கள் இருக்கின்றோம். இந்நிலையில் இந்த இனத்தின் பிரதிநிதிகளாக நன்றியுடையவர்களாக நாங்கள் மாவீரர் தினத்தை கடைப்பிடிக்கின்றோம். […]

அமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்

இலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும ன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றாா். தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மே லும் வா் கூறுகையில், கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறா ர்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். […]

சஜித் தோல்வியடைந்தால் தமிழீழத் தனிநாடு கோருவதற்கு வாய்ப்பு ஏற்படும் – உண்மையைப் போட்டுடைத்த இரா.சம்பந்தன்!

வரும் 16.11.2019 சனிக்கிழமை நடைபெறும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்கடிக்கப்பட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமிருப்பதாக இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். நேற்று 13.11.2019 புதன்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திய பொதுக் கூட்டத்திலேயே இவ் இன்ப அதிர்ச்சி அறிவித்தலை இரா.சம்பந்தன் வெளியிட்டதாக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. இக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் அவர்கள் […]

தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்! – இரா.மயூதரன்.

தமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில் நடைபெறும் மூன்றாவது சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலும் வகையிலேயே இன்றைய தமிழ்த் தலைமைகளின் முடிவுகள் அமைந்துள்ளது. சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது குறித்தது குறித்தவாறு 2019 இறுதியில் ஏதோவொரு தினத்தில் நடக்கும் என்பது 2015 சனவரி 8 இல் மைத்திரி […]

எம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு

13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (07) சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர். இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது, இந்நிலையில் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்த உங்களது நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, வேட்பாளர் ஒருவரை சுட்டுவது என்றால் நாம் இந்த 13 […]

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாாவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இரா.சம்பந்தனால் இன்று (07) விடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை வருமாறு, இத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க ஆகியோரும் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர். தற்போதுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அபேட்சகர்களுள் […]

அதிபர் தேர்தல் – தமிழ்க் கட்சிகளின் ஆதரவு யாருக்கு?

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டோ இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எனினும், சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதிபர் தேர்தல் குறித்த இறுதியான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். யாருக்கு ஆதரவளிப்பது என்று விரைவில் அறிவிப்போம் […]

நாம் ஆதரிப்பவர் தோற்காமல் இருக்கவே ஆதரவை அறிவிக்கவில்லை – விக்கி

ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரவு தெரிவித்த வேட்பாளர் வெற்றிபெறாமல் போனால் எமக்கு சிரமமாக இருக்கும் என்பதனாலேயே மக்களை சிந்தித்து வாக்களிக்க கோரியதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை பரிசீலித்து வருவதாகவும் அடுத்த 3 நாட்களில் அதனை ஆராய்ந்து சரியான தீர்மானத்தை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார். யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வேட்பாளர்களில் அறிக்கையில் சிங்களம், […]

விரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் தமிழ்மக்கள் தவறாது வாக்களிக்குமாறு ஐந்து தமிழ்க்கட்சிகள், கோரியுள்ளன. எனினும், யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை தமிழ் மக்களையே எடுக்குமாறும் அந்தக் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து கையெழுத்திட்ட 13 அம்ச கோரிக்கைகளை எந்தவொரு பிரதான அதிபர் வேட்பாளரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல், 4 மணியளவில் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தனர். தமிழ்க் கட்சிகள் முன்வைத்த […]

நாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை!

இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம். கெஞ்சினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு […]