ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடந்த சிறிலங்காவின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் 67 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜெனிவா அமர்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், அனைத்துலக சமூகம் உள்நாட்டு நீதி முறையை […]
Category: செய்திகள்
இலங்கைக்கு மேலும் கால நீடிப்பு! நிறைவேறியது தீர்மானம்!
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்களை முன்னெடுக்கும் வகையில் 40/1 தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த இந்த தீர்மானத்தை திருத்தங்களின்றி இணை அனுசரணை வழங்க இலங்கை இறுதி நேரத்தில் இணங்கிக்கொண்டது. இதற்கான தீர்மான முன்வரைவு, ‘இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில், முன்வைக்கப்பட்டது. இதற்கமைய, 2015ஆம் ஆண்டு […]
காசி ஆனந்தனின் கோரிக்கை! தலையசைத்தார் தினகரன்!
தமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது பல்வேறு கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஈழத்தின் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்தார். அதே வேளை அங்கு நடராஜனின் உறவினரும் அமமுகவின் துணை பொதுச்செயலாளருமான TTV தினகரனும் சென்றிருந்தார், அங்கு காசி ஆனந்தன் நினைவுரை ஆற்றும்போது மரியாதைக்குரிய தம்பி தினகரன் அவர்களே உங்கள் சித்தப்பா தமிழ் […]
தென்தமிழ்த்தேச மக்களின் தாயகம் தழுவிய போராட்டத்திற்கு பூரண ஆதரவு!
தென்தமிழ் தேசத்திலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தில் 19.03.2019 அன்று இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரணமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது. ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களதும், யுத்த முடிவில் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்படவர்களதும் நிலை என்ன என்பதனை அறிந்து கொள்வதற்காக அவர்களது உறவினர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் குரல் எழுப்பி வருகின்றனர். அதேபோன்று கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட எமது […]
தமிழர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து தூர்ந்துபோகச் செய்ய முயற்சி
தமிழர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு இலங்கைக்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை என்றும் இதனால் மக்களின் பிரச்சினை தொடர்ச்சியாக இழுபறிக்கே செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா […]
சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக எதிர்வரும் 21ஆம் நாள் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் தலைமையில், கனடா, ஜேர்மனி, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை முன்வைத்துள்ளன. இந்த தீர்மானம் எதிர்வரும் 21ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு […]
ஒரு புறம் ஆதரவு மறு புறம் எதிர்ப்பு-சிங்கக்கொடி சம்பந்தன் ஜநாவிடம் தெரிவித்தது என்ன தெரியுமா?
இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நாவின் முன்னாள் அரசியல் விவகாரச் செயலர் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின், முன்னாள் அரசியல் விவகாரச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போதுகடந்த ஆண்டு ஒக்ரோபர் 26 சம்பவங்களின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும், அதன் தலைவரும் செயற்பட்ட விதம் […]
பொள்ளாச்சி ஜெயராமன் மீது சந்தேகப்படும் டிடிவி. தினகரன்
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளரிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பில்லை என காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த பேட்டி, மக்கள் மத்தியில் பெரிய சந்தேகத்தை உண்டாக்கி இருப்பதாகவும் கூறினார். இதில் பொள்ளாச்சி ஜெயராமன் அரசியல் பின்னணி இல்லை என்று அவரே முன்வந்து தீர்க்கமாக சொன்னதால் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவித்தார். பொள்ளாச்சி […]
முற்றவெளிபேரணியிலும், மட்டக்களப்பு போராட்டத்திலும் அணிதிரள அழைப்பு
வடக்குகிழக்கின் சகல பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கும் மட்டக்களப்பில் எதிர்வரும் 19ம் திகதி செய்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் கதவடைப்பு மற்றும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கும் தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் […]
ஐ.நா பாதுகாப்புச் சபையூடாக சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை கோரும் பல்கலை மாணவர் போராட்டத்திற்கு பூரண ஆதரவு
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பது யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் தெரியாமலுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமது உறவினர்களைத் தேடி அலையும் மக்கள் விரக்தியின் விளிம்பிற்குச் சென்றவர்களாக கடந்த இரண்டு வருடங்களாகத் தமது உறவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவருகின்றார்கள். அவர்களது கோரிக்கைகளை ஸ்ரீலங்கா அரசு கருத்தில் எடுக்கவும் இல்லை எடுக்கப்வோவதும் இல்லை. ஆனால் தாம் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிய […]
யேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி 2019
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழத்தின் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து அம் மாணவர்களுக்குள் இருக்கும் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக மூன்றாவது முறையாக நடைபெற்ற கலைத்திறன் போட்டி 2019 மிகச் சிறப்பாக யேர்மனியில் உள்ள கற்றிங்கன் நகரத்தில் 9.3.2019 சனிக்கிழமை நடைபெற்றது. யேர்மனியில் உள்ள ஐந்து மாநிலங்களில் தெரிவுப்போட்டிகள் நடைபெற்று அதில் முதலாமிடத்தைப் பெற்ற மாணவர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர். போட்டிகள் பல வகையாகப் பிரிக்கப்பட்டு நிகழ்ந்தன.சங்கீதம், தாயகப்பாடல், தமிழிசை, கும்மி நடனம், காவடி, கரகம், பரதநாட்டியம், தாயகப்பாடலுக்கான எழுச்சி நடனங்கள், […]
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொள்ளாச்சியில் பல நூறு கணக்கில் பெண்களை ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு கொண்டு அவர்களைச் சீரழித்தக் கொடூரக்கும்பல் குறித்து வெளியே வந்துக் கொண்டிருக்கும் செய்திகளும், காணொளிகளும் நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கிறது. கேக்கவே குலை நடுங்க வைக்கிற வகையில் இருக்கிற இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினையும், பலத்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் தொடங்கி பலதரப்புப் பெண்கள் இக்கும்பலால் ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள் […]











