சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பாக உதவிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில், சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என உதவிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சாட்சிகளை பொலிஸார் அச்சுறுத்துவதாகவும், பொலிஸாருக்கு எதிராக ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரன் நேற்றையதினம் (வியாழக்கிழமை) அளித்த மேற்படி முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவி பாடசாலையில் இடம்பெற்ற பிரத்தியேக வகுப்பிற்கு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சென்று தனிமையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியால் சென்ற மீன் வியாபாரி குறித்த மாணவியிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரை இதுவரை கைது செய்யாமல் பொலிஸார் அசமந்த போக்கில் நடந்து வருவதுடன், இச் சம்பவம் தொடர்பாக சாட்சி தெரிவித்த இருவரை பொலிஸார் அச்சுறுத்தியுமுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்