அரசியல் கைதிகள் விவகாரம்: கூட்டமைப்பைக் குற்றம் சாட்டுகிறார் கஜேந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்விதத்திலும் செயற்படவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே அரசியல்கைதிகளின் உறவினர்கள் தமிழரசு கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிறுவர்தின நிகழ்வுகள் கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் அமைந்துள்ள மாற்றுதிறன் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றிருந்த நிலையில் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த கஜேந்திரன் அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்