தொடர்ந்தும் இறுமாப்புடன் பொய்களைச் சொல்லி தமிழர்களை முட்டாள்களாக்கின்றார் சம்பந்தன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தொடர்ந்தும் இறுமாப்புடன்பொய்களைச் சொல்லி தமிழ் மக்களை தொடர்ச்சியாக முட்டாள்களாக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அடுத்த வருட தீபாவளி பண்டிகை மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடைபெறும் என இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வருடம் 2017ஆம் ஆண்டு தீபாவளிக்குள் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்துவிடும் எனத் தெரிவித்தார். இந்த ஆண்டு அடுத்த வருடத்துக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்துவிடும் எனத் தெரிவித்துள்ளார். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரு கோமாளித்தனத்தை அல்ல தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கும் அவரது செயற்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது.

தான் கூறுவதையெல்லாம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தமிழ் மக்கள் மீதான அவரது கணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.

அத்துடன், வருடம் முழுவதும் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவேன் என அவர் கூறிவரும்பொய்களிலிருந்து தமிழ் மக்கள் தெளிவடையாவிட்டால், இது தமிழ் மக்களுக்கு பாரிய சவாலாக மாறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்