டெலோவை உடைக்கும் சுமந்திரன்?

கூட்டமைப்பில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதிக்கத்தை குறைத்துவிட செல்வம் அடைக்கலநாதன் முதல் பங்காளிகள் வரையாக தலையால் நடக்க சத்தமின்றி தனது அடுத்த கட்ட பயணத்தை ஆரம்பித்துள்ளார் சுமந்திரன். வடமராட்சியில் தனது இலங்கை தமிழரசுக்கட்சியின் வடமராட்சி காரியாலயத்தை அவர் திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே கரணவாய்,உடுப்பிட்டி வருடத்திற்கொரு தடைவ காரியாலயங்களை திறப்பதும் பின்னர் அதனை இழுத்து மூடுவதும் வழமை. இவ்வாறு ஏற்கனவே திறக்கப்பட்ட அலுவலக ங்களை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது புதிதாக ஒரு அலுவலகத்தை திறந்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். இதனிடையே தனது அலுவலக திறப்பு […]

விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலையும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருக்கு விடுக்கப்பட்ட மிரட்டலும் அச்சுறுத்தலும் அனைத்து தமிழ் மக்களுக்கும் விடுக்கப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன், அத்தகைய மிரட்டலையும் அச்சுறுத்தலையும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய க.வி. விக்னேஸ்வரன் […]

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்?

இனப்பிரச்சினை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்: பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார் தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களை மிகவும் லாவகமாக கையாண்டு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஆங்கிலத்தில்) உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன், நீங்கள் சொல்வது உண்மையானால் “வடக்கு – கிழக்கில் தமிழ் […]

ரெலோ,புளொட்டை கழட்டி விடும் தமிழரசு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் நடப்பவை தொடர்பில் பங்காளி கட்சிகள் மற்றும் ஆதரவாளர்கள் அவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு கூட்ட அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் விவகாரம் […]

அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்றத்தேர்தல் திருவிழா முடிவடைந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மை ஆசனங்களை பேரினவாதக் கட்சியான சிறிலங்கா பொதுசனப் பெரமுன பெற்றுள்ளது. இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப்பெற்ற ராஜபக்ச அரசில் அங்கம்வகிப்பவர்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் ஆவர். 2009ம் ஆண்டில் இருந்து இன்றுவரை அரசியல் செயற்பாடுகளில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் தமிழ்மக்களுக்குத் தேடிக்கொடுக்காமலேயே பத்து வருடங்களை இணக்க அரசில் செய்து வீணடித்த தமிழ் அரசியல்வாதிகள் இனியும் பாராளுமன்றத்தில் […]

சிறிலங்காவின் அரசமைப்பு மாற்றம் குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்

சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தங்களில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து சர்வதேச சமுகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கூட்டமைப்பின் தலைவருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு திருகோணமலையில் நேற்று (26) இடம்பெற்றது. நாங்கள் தேர்தல் முடிவுகள் குறித்து குறிப்பாக வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார். 13 வது திருத்தத்தை […]

கண்ணதாசன் தொடர்ந்தும் சிறையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பை தள்ளுபடி செய்ததுடன், அவரை விடுவித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் கட்டளை வழங்கியிருந்தது. இந்நிலையில் கண்ணதாசன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு வழக்கை மீள விளக்கத்துக்காக எடுப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு நேற்றைய தினம் (26) குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, செப்டம்பர் 7ம் திகதி அழைக்குமாறு தவணையிட்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி […]

சி.வி.விக்கினேஸ்வரன் விவகாரம்-சிவாஜி காட்டம்

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்கள் வரலாற்றை – எங்கள் விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்துகிறதென்றால், எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் பாட்டில் செல்லுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிக்கம் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி தொன்மையான மொழி. லட்சக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி தமிழ்மொழி காணப்படுகின்றது. செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒரு மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உலகத்திலே பல […]

மாவைக்கு மீண்டும் முதலமைச்சர் கனவு?

தமிழ் அரசுக்கட்சியின் களையெடுப்பு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மாகாணசபை கனவுகளுடன் ஓடிப்பிடித்து சந்திப்புக்களை சிலர் நடத்த தொடங்கியுள்ளனர்.எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தரப்புக்களை களையெடுப்பதில் தமிழரசின் மாவை தரப்பு மும்முரமாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வவுனியாவில் சுமந்திரன் ஆதரவு சத்தியலிங்கத்தை புறந்தள்ளி சிவமோகனை முன்னிறுத்த மாவை முடிவு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக வவுனியாவில் அவசர கூட்டமொன்றை சனிக்கிழமை கூட்டத்திற்கு முன்னதாக நடத்தியுமுள்ளார். இதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கு ஓடோடி வந்த சத்தியலிங்கம் சந்திப்புக்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே தேர்தல் தோல்வியினையடுத்து தனது தமிழரசு […]

தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன்,சிறிதரன் ஆதரவாளர்களுக்கு ரெட் கார்ட்?

இலங்கை தமிழரசுக்கட்சியினை தனது கைகளுள் கொண்டு செல்ல முற்பட்ட சுமந்திரன் – சிறீதரன் தரப்பிற்கு ஆப்படிப்பது போன்று தமிழரசு கட்சியினைமாவை புனரமைப்பு செய்யவுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் 2020.08.29ம் திகதி வவுனியா குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், […]

மணிவண்ணன் விவகாரம்: பரிசீலிக்க குருபரன் கோரிக்கை?

மணிவண்ணன் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருக்கும் முடிவின் உள்ளடக்க சரி பிழைகளுக்கப்பால் அது எடுக்கப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு அடிப்படையான கருத்து வேறுபாடு உண்டென அக்கட்சி ஆதரவாளர் சட்டத்தரணி கு.குருபரன் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசிய கட்சி ஒன்று எப்படி உள்ளக ரீதியாக செயற்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என்ற கடமையில் இருந்து முன்னணி விலகியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். பல்வேறு நெருக்கடிகளை சவால்களை சந்தித்த முன்னணிக்கு இந்தக் கடமை உண்டு. […]

தமிழ் பிரதிநிதிகளுக்கு அழைப்பு-விக்னேஸ்வரன் தங்கள் பக்கம் என்கிறது சிங்கள தரப்பு!

அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முன்வருமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு கல்வியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் தலைமைத் தேரர்களை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்ட பின் கல்வியமைச்சர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், வடக்கில் அரசியல் மிகவும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் அல்ல. வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் […]