மாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிருக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து அதன் கட்சி தலைவர் திரு .கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர். மேலும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் 55,000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைக் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பெற்றுள்ளனர்.

சசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி?

நடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்னு இன்றிரவு கொண்டு சென்றுள்ளார். கூட்டடமைப்பின் விருப்பு வாக்கின் படி முதலாம் இடத்தில் சி.சிறீதரனும்,இரண்டாம் இடத்தில் சசிகலா ரவிராஜீம் மூன்றாவது இடத்தில் த.சித்தார்த்தனும் உள்ளனர். இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வாக்கிi மாற்றி சுமந்திரனை செருக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை […]

சம்பந்தன் கூறுவது உண்மையல்ல!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசார இறுதிப் பரப்புரைக்கூட்டம் நேற்று( 2) கல்வியங்காட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா, அருந்தவபாலன், சிவகுமார், சிற்பரன், மீரா அருள்நேசன், அனந்தி சசிதரன் ஆகிய வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றிய சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்ததாவது, தமிழ் மக்களுடைய நலன்களைக் காப்பார்கள், எதிர்காலத்தை திட்டமிட்டு செப்பனிடுவார்கள் என்று பல்வேறுபட்ட உறுதிமொழிகளை கொடுத்த பின்னர் தான் நாங்கள் […]

சுமா,சிறீயை வெளியே அனுப்புவோம்!

தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்களின் தியாகங்கள் உண்மையெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் வெளியேற்ற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது யாழ் ஊடக அமையத்தில் 2/8/2020 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் வலிந்து காணாமல் […]

நான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருக்கவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். அந்த வகையில் தான் பரப்புரை நிகழ்வுகளில் நான் பங்கேற்கிறேன். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது சகோதர வேட்பாளர்களுடனும் சேர்ந்து இயங்கவே விரும்புகிறேன். இது தொடர்பாக கட்சித் தலைமைக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். ஆயினும் நான் பங்கேற்கும் நிகழ்வுகளை […]

நுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்!

நுணலும் தன் வாயால் கெடும்.சிறீதரன் கள்ள வோட்டு போட்டாரா இல்லையாவென்பது தெரியர்து.ஆனாலும் அவர் தனது வாயால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பதால் சட்டம் தன் கடமையினை செய்யுமென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் மாரிமுத்து கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சட்டம் ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொன்றாக இருக்கமுடியாது. கள்ளவோட்டு போட்டவர் சிங்களவரா அல்லது தமிழரா,முஸ்லீமாவென பார்த்து சட்டம் பாயமாட்டாது. இதனால் சிறீதரன் தனது வாயால் […]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்

ஓற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு அதற்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளை முடக்குவதற்கு ஆணை கேட்கின்ற தரப்புக்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.அதேவேளை தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தடம்மாறாது பயணிக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும் .இதனூடாகவே தமிழ் மக்களின் இருப்பைத் தக்க வைத்தக் கொண்டு அபிலாசைகளையும் வென்றெடுக்கக் கூடியதாக அமையுமென முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக […]

முண்டு கொடுத்தவர்களிற்கு வாக்களிக்கவேண்டாம்?

நேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்! கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரை தெரிவு செய்யவேண்டும். அவர்களுக்கு வாக்களிக்க முயற்சிப்போம். நிராகரிக்க வேண்டியவர்களை அவதானத்துடன் நிராகரிப்போம். தெரிவுசெய்ய வேண்டியவர்களை அவதானிப்புடன் தெரிவு செய்வோம் -அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், எமக்கு முன் […]

முன்னணி கண்டனம்?

தமிழர்களின் வரலாற்று தலங்களை ஆக்கிரமித்து பௌத்த மயமாக்கும் சதித் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டிப்பதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களின் கலை கலாச்சார பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாது அதனை அழித்தொழிக்கின்ற திட்டமிட்ட வேலைகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்கா அரசுகளின் இத்தகைய இனவாதச் செயற்பாடுகளுக்கு பௌத்த பேரினவாதிகள் தொடர்ந்தும் ஆதரவை வழங்கி வருகின்றனர். ஏனெனில் சிங்கள அரசுகளும் அதே பேரினவாதச் […]

சுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி!!

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்தீபனின் குடும்பமோ நிச்சயம் எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்கப்போவதில்லை.மாவீரர்களை , போராளிகளை பயங்கரவாதிகள் என்ற எம்.ஏ.சுமந்திரனை அவர்கள் என்றுமே மன்னிக்கப்போவதுமில்லையென தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும்,மூத்த போராளியுமான பசீர் காக்கா என்றழைக்கப்படும் மனோகர்.மாவீரரான பெண் போராளி அறிவிழியின் தந்தையுமான அவர் யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனிடம் மன்றாட்டமாக […]

கூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்

சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர்தான் கண்டுகொண்டேன் என்று முன்னாள் வடமாகண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் வடமாகண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் […]

யாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று (26) காலை ஆயர் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பல விடயங்களை பேசிய முன்னணியினர், ஆயரின் ஆசியையும் பெற்றனர். இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றியிருந்தனர்.