ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவை மீட்பதாக கூறி தொடர் சட்டப்போராட்டம் நடத்தியதால், அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார். சமீபத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால், பொது சின்னம் ஒதுக்க முடியாது […]
Category: செய்திகள்
தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்
தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர். சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறிலங்கன் விமான சேவையின் UL-138, UL-132 , UL-122 விமானங்களின் மூலம், மதுரை, திருச்சி, சென்னை விமான நிலையங்களின் ஊடாக, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். நாடு திரும்பும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரில், 23 […]
மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை?
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான இன்றுவரையும், மாவை சேனாதிராசாவின் பெயர்மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதாலேயே அவர் தெரிவாகவுள்ளார். தமிழ் அரசுக்கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 26,27,28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் புதிய தலைவர், செயலாளர் தெரிவும் இடம்பெறவுள்ளது. தலைவர் பதவியில் மாற்றம் வரலாமென்ற தகவல்கள் வெளிவந்தபோதும், பின்னர், மீண்டும் பதவியில் தொடர மாவை சேனாதிராசா விரும்பியதையடுத்து, அவரது பெயரே மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்சியின் விதிமுறைகளிற்கமைவாக […]
முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்!
முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். த ஹலோ ரஸ்ட் (The Hallo Trust) மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களே இவ்வாறு கண்ணிவெடியில் சிக்கியுள்ளனர். இன்று காலை முதல் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி […]
கிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!
கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் கிளிநாச்சி, கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கரடிப்போக்கு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்து தராது, அப்பகுதியில் மதுபானசாலையை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அப்பகுதியில் இரண்டு பாடசாலைகள் உள்ளதாகவும், இதனால் […]
தமிழரசுக் கட்சிக்குள் வாரிசு அரசியல்?
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மாவை சேனாதிராஜாவின் மகனைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சுமந்திரன் அணி சரவணபவன் அணி சிறிதரன் அணி மாவை அணி என நான்கு அணிகளாககப் பிரிந்து தமது அணியைச் சேர்ந்தவரையே இளைஞரணிச் செயலாளராக கொண்டுவரவேண்டும் என மல்லுக்கட்டிவருகின்றனர். வெளிநாட்டில் ஓடி ஒழித்துவிட்டு திடீரென அரசியலுக்குள் நுளைக்கப்பட்ட மாவையின் மகனுக்கு இளைஞரணி செயலர் பதவி கொடுப்பது நீண்டகாலமாக கட்சிக்கு விசுவாசமாக ஊரில் […]
சிவாஜிலிங்கத்தின் 23 நாள் நடை பயணம்!
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு தண்டனை வழங்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படவுள்ள நீதி கோரிய நீண்ட பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தந்தை செல்வாவின் 42 ஆவது நினைவு தினமான எதிர்வரும் 26ஆம் திகதி வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில், நீதி கோரிய நீண்ட பயணம் ஒன்று […]
யாழில் மின்னல் தாக்கி பெண்கள் உட்பட மூவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் உட்பட மூவர், அதிக மழை காரணமாக தென்னைமரத்தடியில் உள்ள கொட்டிலில் தஞ்சம் புகுந்த வேளையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் திருநாவுக்கரசு கண்ணன் (48 வயது), கந்தசாமி மைனாவதி (52 வயது), ரவிக்குமார் சுதா (38 வயது) ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் […]
திருகோணமலையில் பாரிய போராட்டம் – உறவுகள் அழைப்பு
எதிர்வரும் 27ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருகோணமலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த போராட்டம், மட்டக்களப்பு காந்தி சிலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து மனித உரிமை ஆணைக்குழுவை நோக்கி ஊர்வளமாக செல்லவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அரசியல் பிரமுகர்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். […]
முல்லைத்தீவில் விபத்து – இராணுவ அதிகாரி உயிரிழப்பு
முல்லைத்தீவு, 03 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கிப் பயணித்த கன்டர் வாகனம் ஒன்று வற்றாப்பளையில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள்மீது மோத முற்பட்ட வேளை வீதியினை விட்டு விலகி ஓராமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது வீதியின் ஓரமாக கடமையில் நின்ற இராணுவ பொலிஸார் மீது கன்டர் வாகனம் மோதிக்கொண்டதில் இராணுவ […]
லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் விடுதலை
லண்டனின் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், பிரித்தானிய காவல்துறையினரால் எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். லூட்டன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை மாலை வந்திறங்கிய நான்கு இலங்கையர்கள், புகலிடம் கோர முற்பட்ட போது, பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தாங்கள் சிறிலங்காவில் வழக்குகளை எதிர்நோக்கியிருப்பதாக, அவர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியிருந்தனர். மறுநாள் வியாழக்கிழமை, தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் அந்த […]
பிரித்தானியாவில் 4 ஈழத்தமிழர்கள் கைது!
பிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 ஆண்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நான்கு பேரும் பெட்போர்ட்செரீப் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த புதன்கிழமை லூட்டன் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.












