அநுராதபுரம் சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஐ.நாவின் சிறப்புக் குழுவினர் சந்தித்தனர்.அங்கு அவர்கள் அவதானித்ததை ஐ.நாவுக்கு அறிக்கையிடுவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
அவர்களின் வழக்கு வவுனியாவில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றத் துக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்தே அவர்கள் இந்தத் தொடர் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
அநுராதபுரம் சிறைக்குச் சென்ற ஐ.நா. சிறப்புக் குழு அவர்களைச் சந்தித்தது.அரசியல் கைதிகளுடன் தனித்தனியாகக் கலந்துரையாடியது. கைது செய்யப்பட்டமைக்கான காரணம், தடுத்து வைக்கப்பட்டுள்ள காலம், சிறை மாற்றப்பட்டமை, வழக்கு நீண்டகாலம் இழுபடுவதற்கான காரணம் எனப் பல விடயங்களைக் கேட்டறிந்தது.
அவதானித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் 15ஆம் திகதி சிறப்பு அறிக்கை ஒன்றை இலங்கை அரசிடம் இந்தக் குழு ஒப்படைக்கவுள்ளது. அதன் பிரதி ஐ.நாவுக்கும் அனுப்பப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.